728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

Bonesetter plant: எலும்பிற்கான அருமருந்து
0

Bonesetter plant: எலும்பிற்கான அருமருந்து

எலும்பு முறிவில் இருந்து மீள்பவர்கள், கீல்வாதம் உள்ளவர்கள், எலும்பின் அடர்த்தியை அதிகரிப்போருக்கு போன்செட்டர் செடியின் தண்டு சூப் நல்லது என்கின்றனர் வல்லுனர்கள்.

yellow soup

பெங்களூரைச் சேர்ந்த விஷக் சங்கர் (39) என்பவர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது விழுந்து இரண்டாவது கால் எலும்பில் முறிவு ஏற்பட்டது. அவர் 30 நாட்களுக்கு, வாக்கிங் காஸ்ட்டை அணிய வேண்டியிருந்தது.

தகவல் தொழில்நுட்ப வல்லுநரான இவர் “இந்தக் காலகட்டத்தில், மீண்டு வர உதவ கால்சியம் மற்றும் பிற சப்ளிமெண்ட்ஸ் எடுக்க எனக்கு அறிவுறுத்தப்பட்டது. இருப்பினும், இந்த மாத்திரைகளால் நான் கடுமையான மலச்சிக்கலை அனுபவித்தேன்” என்கிறார் .

எலும்பு மீளுருவாக்கம் மற்றும் வலிமையை மேம்படுத்த பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படும் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் (Cissus quadrangularis) என்ற மூலிகையை எடுத்துக் கொள்ளுமாறு ஆயுர்வேத மருத்துவர் அவருக்கு அறிவுறுத்தினார்.

மூலிகை அதன் பொதுவான மற்றும் இந்தியப் பெயர்களால் வெல்ட் திராட்சை, அஸ்திசம்ஹாரா, ஹட்ஜோட், மங்கரவல்லி, நல்லெரு, அஸ்திகூடி அல்லது செங்கலம்பரண்டா என்றும் அழைக்கப்படுகிறது. அதன் ஹிந்திப் பெயரான ஹட்ஜோட் என்பதன் பொருள் ‘எலும்பை இணைக்கும்’ என்பதாகும்.

இந்த மூலிகையிலிருந்து ஒரு கலவை (சட்னி) அல்லது சூப் தயாரிக்க சங்கருக்கு அறிவுறுத்தப்பட்டது. சுவாரஸ்யமாக, அவர் தனது ஊட்டச்சத்து சப்ளிமெண்ட்ஸைப் பார்த்தபோது, அவற்றில் சிசஸ் குவாட்ராங்குலரிஸ் (Cissus quadrangularis) இருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டார்.

 

நன்மை பயக்கும் உட்பொருக்கள் – எலும்பு ஆரோக்கியம்

அடாமண்ட் க்ரீப்பர் என்றும் அழைக்கப்படும் இந்தச் செடி, எலும்பு குணப்படுத்துதலை மேம்படுத்துகிறது மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது. இதில் கால்சியம், வைட்டமின்கள் C மற்றும் E, கரோட்டினாய்டுகள், டானின்கள் மற்றும் பீனால்கள் போன்ற ஆக்ஸிஜனேற்றக் கலவைகள் நிறைந்துள்ளன.

கேரளா, கொச்சியில் உள்ள அகே நேச்சுரல் இங்க்ரீடியன்ட்ஸ் நிறுவனத்தின் ஆயுர்வேத ஆராய்ச்சியாளரும் விஞ்ஞானியுமான டாக்டர் நியா T சிவன், அவை வலிமையை மீட்டெடுக்க உதவக்கூடும் என்று கூறுகிறார்.

எலும்பு மற்றும் மூட்டுத் திசுக்களில் கொலாஜனின் அதிகரித்து வரும் தொகுப்புக்கு சிசஸ் குவாட்ராங்குலரிஸ் பங்களிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மூலிகையில் பீட்டா-சிட்டோஸ்டெரால் கலவை இருப்பது எலும்பு தாது அடர்த்தியில் சாத்தியமான மேம்பாடுகளுடன் தொடர்புடையதாகத் தோன்றுகிறது.

இருப்பினும், மூலிகையின் சரியான செயல்பாட்டைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள மேலும் ஆராய்ச்சி தேவை. எனவே, கீல்வாதம் மற்றும் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க இந்த மூலிகை பரிந்துரைக்கப்படுகிறது.

பல ஆய்வுகள் இந்த மூலிகையானது எலும்பு இழப்பைக் கட்டுப்படுத்தலாம், எலும்பு முறிவுகளை விரைவாகக் குணப்படுத்தலாம் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளை நிர்வகிக்கலாம் என்று அவர் மேலும் கூறுகிறார்.

ஒரு முன்னோட்ட ஆய்வில், ஒன்பது பங்கேற்பாளர்களுக்கு சிசஸ் குவாட்ராங்குலரிஸின் 500 mg காப்ஸ்யூல்கள் வழங்கப்பட்டன, மேலும் ஆறு வாரங்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று முறை ஒரு காப்ஸ்யூலை உட்கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. ஆய்வின் முடிவில், பங்கேற்பாளர்கள் தங்கள் வலி மற்றும் வீக்கம் குறைந்துவிட்டதாக தெரிவித்தனர்; அவர்களின் தாடை எலும்பு முறிவுகளும் விரைவில் குணமானது.

மற்றொரு ஆய்வில் ஆஸ்டியோபோரோசிஸ் உள்ள எலிகளுக்கு சிஸ்ஸஸ் கொடுக்கப்பட்டது. மேலும் எலும்பு தேய்மானத்தைத் தடுக்க இந்தச் செடி உதவியது.

 

பக்க விளைவுகள்

இந்த மூலிகைச் செடியைப்பொதுவாக உட்கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், வளர்சிதை மாற்ற நிலைகளில் அதன் விளைவு தொடர்பான ஓர் ஆய்வு, இந்தச் செடி மருந்தை உட்கொண்டவர்கள் வாய் வறட்சி, வாயு மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற சிறிய பக்க விளைவுகளைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

டாக்டர் சிவன், மூலிகையைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு இரும்புப் பாத்திரத்தில் லேசாக வறுக்க வேண்டும் என்கிறார்.

சங்கர், ஹட்ஜோட் என்ற மூலிகையை சூப் வடிவில் உட்கொண்டார். “இயற்கையிலிருந்து பெறப்பட்ட மூலிகை மருந்துகளை நான் விரும்புவேன். ஆயுர்வேத நிபுணரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி, நான் 21 நாட்களுக்கு தினமும் சூப் தயாரித்துச் சாப்பிட்டேன், ”என்று அவர் கூறுகிறார்.

குணப்படுத்தும் செயல்முறை உடனடியாக இல்லை, ஆனால் படிப்படியாக அவர் நன்றாக உணர்ந்தார்.

ஷங்கர் பின்பற்றிய ரெசிபி இதோ.

தேவையான பொருட்கள்

  • பருப்பு (பச்சைப் பருப்பு / மூங் பருப்பு, சிவப்பு பயறு / மசூர் பருப்பு அல்லது சிவப்பு பருப்பு / துவரம்பருப்பு ஆகியவற்றின் கலவை) – ½ கப்
  • அரைத்து சுத்தம் செய்த ஹட்ஜோட் – 10 துண்டுகள்
  • (லேசான அரிப்பு ஏற்படாமல் இருக்க இந்த செடியை வெட்டும்போது கையுறைகளை அணியுங்கள்.)
  • மஞ்சள் தூள் – ¼ தேக்கரண்டி
  • ருசிக்க உப்பு
  • நெய் (தெளிவுபடுத்தப்பட்ட வெண்ணெய்) – 1 தேக்கரண்டி
  • இஞ்சி மற்றும் பூண்டு – பொடியாக நறுக்கியது அல்லது துருவியது – 1 டேபிள் ஸ்பூன்
  • காய்கறி குழம்பு அல்லது வெதுவெதுப்பான நீர் – 2 கப்
  • அலங்கரிக்க: ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் கொத்தமல்லி இலைகள், நறுக்கியது; மற்றும் கருப்பு மிளகு நொறுக்கப்பட்ட அல்லது தூள்.

முறைகள்

  • துவரம் பருப்பை இரண்டு அல்லது மூன்று முறை வடிகட்டி, தண்ணீரை வடித்து, தனியே வைக்கவும்.
  • இவற்றை ஒன்றாக மூன்று விசில்கள் வரும் வரை வேகவைக்கவும்: ஹட்ஜோட் துண்டுகள் மற்றும் பருப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் உப்பு. அழுத்தம் வெளியேறும் போது, பருப்பு மற்றும் காய்கறிகள் வெந்துவிட்டதா எனப் பார்க்கவும்.
  • ஆறியதும், ஒரு மிருதுவான, கிரீமி ப்யூரியைப் பெற சூப் கலவையை ஒரு பிளெண்டரில் இயக்கவும். எந்த நார்ச்சத்தையும் அகற்ற ப்யூரியை வடிகட்டவும்.
  • ஒரு கடாயில், ஒரு தேக்கரண்டி நெய்யை உருக்கவும். ஒரு தேக்கரண்டி இஞ்சி-பூண்டு கலவையில் கலந்து 30 விநாடிகள் வதக்கவும். கடாயில் ஹட்ஜோட்-பருப்பு ப்யூரி, இரண்டு கப் வேகவைத்த தண்ணீர் அல்லது காய்கறி குழம்பு சேர்த்து தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும்.
  • நன்கு கிளறி, கலவையை மெதுவாகக் கொதிக்க விடவும். உங்கள் விருப்பப்படி நிலைத்தன்மையைச் சரிசெய்யவும். அது மிகவும் தடிமனாக இருந்தால், சிறிது வெதுவெதுப்பான நீரில் அதை மெல்லியதாக மாற்றவும்.
  • இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் சூப்பை அலங்கரிக்கவும்.

சிறிது கருப்பு மிளகுத் தூள் தூவி சூப் பரிமாறவும்.

தொடர்புடைய குறியிடல்

தொடர்புடைய இடுகை

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

four + 9 =

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
ஆக்சிஜனேற்ற அயற்சியை (Oxidative stress) குறைத்து ரத்தக் கொதிப்பைச் சீராக்க உதவும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், வைட்டமின்கள் ஆகியவை தக்காளியில் உள்ளன. இதனால் இதயநோய் உண்டாவதற்கான வாய்ப்பு குறையும்.
கட்டுரை
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பதுடன் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் அவர்கள் ரத்த தானம் செய்யலாம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்டுரை
குழந்தைகளின் சுவாசக் குழாய் சிறிதாக இருக்கும் என்பதால் மூச்சுக்குழாய் அழற்சியானது அவர்களுக்கு அதிகச் சிரமத்தைக் கொடுக்கும். இந்தத் தொற்றின் அபாய அறிகுறிகளைக் பெற்றோர்களால் கண்டறிய முடிவது முக்கியம்.

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Newsletter

* Please check your Spam folder for the Opt-in confirmation mail

Opt-in To Our
Daily Newsletter

We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.