728X90

728X90

0

0

0

0

0

0

0

0

0

இந்த கட்டுரையில்

உலகை மீண்டும் அச்சுறுத்தும் தட்டம்மை
1063

உலகை மீண்டும் அச்சுறுத்தும் தட்டம்மை

2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கிறது

உலகம் முழுவதும் தட்டம்மை நோய்த் தொற்று பரவலுக்கான சாத்தியங்கள் அதிகரித்து வருவதன் காரணமாக அதன் பரவலைத் தடுக்க பிள்ளைகளுக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டியதன் அவசியத்தை இந்திய மருத்துவ வல்லுனர்கள் வலியுறுத்துகின்றனர்

2023ல் உலகளவில் 3,06,000 பேருக்கு தட்டம்மை நோய்த் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இது 2022ம் ஆண்டுடன் ஒப்பிட்டால் 79% அதிகம். இதன் காரணமாக உலக சுகாதார அமைப்பு இந்த நோய்த் தொற்று பரவல் கவலை அளிப்பதாக உள்ளது என்று தெரிவித்துள்ளது. அதோடு 2024 முடிவில் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று UN சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

“தட்டம்மை பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்து வருகிறது” என்று தட்டம்மை  மற்றும் ரூபெல்லா நோய் தொடர்பான ஆலோசகரான நடாஷா குரோவ்கிராஃப் தெரிவித்தார். அவர் சமீபத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசும்போது இந்த ஆண்டு இறுதிக்குள் உலகளவில் உள்ள அனைத்து நாடுகளிலும் பாதி பேருக்குப் பரவக்கூடிய அளவில் இந்த நோய்த் தொற்று வேகமாகப் பரவி வருவதாக எச்சரித்தார். அதோடு, தோராயமாக 14 கோடிக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இந்த நோய்த் தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்று அவர் கூறியுள்ளார்.

உலகளவில் தட்டம்மை தடுப்பூசி போடுவது 83% அளவு குறைந்ததே இந்த நிலைக்குக் காரணம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. COVID-19 நோய்த் தொற்று காலத்தில் குழந்தைகளுக்குத் தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட தொய்வுதான் இது பன்மடங்கு அதிகரிப்பதற்கு முக்கியக் காரணம்.

2023ல் இந்தியாவிலும் தட்டம்மை பாதிப்பு அதிகரித்தது. இதனால், தடுப்பூசி போடப்படாத குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதன் அவசியத்தை வலியுறுத்த அரசாங்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது. “இந்தியாவைப் பொறுத்தவரை தட்டம்மை பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது. அதனால் தட்டம்மை நோய்த் தொற்று பரவல் குறித்து கவலை கொள்ளத் தேவையில்லை” என்று குழந்தைநல மருத்துவத்திற்கான இந்திய அமைப்பின் முன்னாள் தலைவரும், மும்பையைச் சேர்ந்த குழந்தைநல மருத்துவருமான டாக்டர் உபேந்திரா கிஞ்சவடேகர் தெரிவிக்கிறார். அத்துடன் இந்த நோய்த் தொற்று பரவலைத் தடுக்க தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தையும் அவர் குறிப்பிடுகிறார். இதன் மூலம் பல உயிர்களைக் காக்க முடியும் என்று அவர் கூறுகிறார்.

தட்டம்மையை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும் 

தட்டம்மை என்பது பெரும்பாலும் குழந்தைகளுக்கு வரக்கூடிய, காற்று வழியே அதிகளவில் பரவக்கூடிய ஒரு வைரஸ் தொற்றாகும். இரண்டு டோஸ் தடுப்பூசி மூலம் இந்த நோய்த் தொற்றை எளிதில் தடுக்க முடியும் என்கிறது WHO.

சிகிச்சை அளிக்காமல் விட்டால் நிமோனியா போன்ற சுவாசத் தொற்றுகள், பேதி, குருட்டுத்தன்மை, மூளை வீக்கம், காது தொற்று போன்ற பல பிரச்சினைகள் வரக்கூடும்.

யாருக்கு இந்த நோய் வரலாம்?

“பிரதானமாக, தடுப்பூசி போடாத மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு இந்த நோய்த் தொற்று பாதிப்பு வர அதிக வாய்ப்புள்ளது” என்கிறார் டாக்டர் கிஞ்சவடேகர். அதிக மக்கள் நெரிசல் உள்ள பகுதியில் வசிப்பவர்கள், சமூகப் பொருளாதார நிலையில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள், உணவில் அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காதவர்கள் ஆகியோரும் இந்த நோய்த் தொற்றுக்கு ஆளாக நேரும்.

ஐந்து வயதிற்குக் கீழுள்ள குழந்தைகள் மற்றும் 20 வயதைக் கடந்த பெரியவர்களுக்கு இந்த நோய்த் தொற்று வரக்கூடும் என்று அமெரிக்காவில் உள்ள, நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் குறிப்பிடுகிறது.

தட்டம்மையின் முதற்கட்ட அறிகுறிகள்

வைரஸ் தொற்று ஏற்பட்டு 7-14 நாட்களுக்குப் பிறகு தட்டம்மையின் முதற்கட்ட அறிகுறிகள் தென்படும் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வழக்கமான அறிகுறிகளில் இவை அடங்கும்:

  • தடிப்புகளுடன் காய்ச்சல் 
  • மாகுலோபாபுலர் தடிப்பு (புடைப்புகளுடன் கூடிய தட்டையான தோற்றத்தால் வகைப்படுத்தப்படுகிறது).
  • இருமல் மற்றும் மூக்கு ஒழுகுதல்
  • கண் சிவப்பு நிறமாதல் மற்றும் அதில் தண்ணீர் வடிதல்

தடிப்புகள் பொதுவாக காதுக்கு பின்னால் இருந்து பரவி படிப்படியாக தோள்பட்டை, மார்பு மற்றும் கால்களுக்கு கீழே செல்கின்றன. சில குழந்தைகளுக்கு வாயில் சிறிய வெள்ளை புள்ளிகள் (கோப்லிக் புள்ளிகள்) உருவாகலாம் என்று அமெரிக்காவில் உள்ள, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் தெரிவிக்கிறது.

சிகிச்சையளியுங்கள், தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள், பரவலைத் தவிருங்கள்

தட்டம்மை இருமல் மற்றும் தும்மல் மூலம் வேகமாக பரவுகிறது. ஒரு பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தடிப்பு தோன்றுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்னும் பின்னும் பிறருக்கு தட்டம்மை பரவலாம்.

டாக்டர் சஞ்சீவ் அஹுஜா (குழந்தை மருத்துவர், டாக்டர் எல்எச் ஹிராநந்தானி மருத்துவமனை, மும்பை) “மல்டிவைட்டமின் சப்ளிமெண்ட்ஸ், சிகிச்சை முறையின் ஒரு பகுதியாகும்” என்கிறார். நோய் பரவுவதைத் தடுக்க பாதிக்கப்பட்ட குழந்தை தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

தட்டம்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள்

தொற்றுநோயைத் தடுப்பதற்கான மிகச் சிறந்த வழி தடுப்பூசி ஆகும் என்று டாக்டர் கிஞ்சாவடேகர் பரிந்துரைக்கிறார். தட்டம்மைக்கு எதிரான குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணை இரண்டு அளவுகளில் உள்ளது (ஒன்பதாவது மற்றும் பதினாறாவது மாதங்களில்). இந்தத் தடுப்பூசியானது தட்டம்மை மற்றும் ரூபெல்லா (MR) தடுப்பூசி அல்லது தட்டம்மை, சளி மற்றும் ரூபெல்லா (MMR) தடுப்பூசியின் கீழ் வருகிறது. இந்தியாவில் தேசிய நோய்த்தடுப்பு அட்டவணையின் கீழ் இவை சேர்க்கப்பட்டுள்ளன.

2023 ஆம் ஆண்டில், அம்மை நோய் பரவுவதைக் கண்ட மகாராஷ்டிரா, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் அல்லது இரண்டாவது டோஸ் தடுப்பூசியைத் தவறவிட்டதால், அந்த பகுதியில் நோய்த் தொற்று ஏற்பட்டதை அடுத்து தடுப்பூசி போடத் தொடங்கியது.

உணவு மற்றும்  தண்ணீரில் சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது என்று டாக்டர் கிஞ்சாவடேகர் வலியுறுத்துகிறார். அதிக புரதச்சத்து கொண்ட உணவைப் சாப்பிடுவது நன்மை பயக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

புரதம் மற்றும் வைட்டமின் A நிறைந்த ஆரோக்கியமான உணவை உட்கொள்வது அம்மை மற்றும் பிற ஊட்டச்சத்து குறைபாடுகளிலிருந்தும் பாதுகாப்பை வழங்குகிறது. பச்சை இலைக் காய்கறிகள், கேரட், பீட்ரூட், ஆரஞ்சு, கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற வைட்டமின் A நிறைந்த உணவுகள் தடுப்பூசியுடன் குழந்தைக்கு அம்மை நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் என்று டாக்டர் கிஞ்சாவடேகர் குறிப்பாக சுட்டிக்காட்டுகிறார்.

தெரிந்துகொள்ள வேண்டியவை

  • தடுப்பூசி (MMR தடுப்பூசி அல்லது MR தடுப்பூசி) மூலம் வைரஸ் தொற்றைத் தடுக்க முடியும்.
  • சமீபத்தில் ஏற்பட்ட நோய்த் தொற்று பரவல் தட்டம்மை குறித்த கவலையை அதிகரித்துள்ளது. இது குழந்தைகளுக்குக் கடுமையான ஆரோக்கிய பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
  • கோவிட்-19 நோய்த் தொற்று காலத்தில் தட்டம்மை தடுப்பூசி போடுவதில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாக இந்தப் பிரச்சினை எழுந்துள்ளது.
  • குழந்தைகள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் இந்த தொற்றுக்கு ஆளாக அதிக வாய்ப்பிருக்கிறது.

உங்கள் அனுபவம்/ கருத்தைப் பகிர்க

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமடைபவை

கட்டுரை

கட்டுரை
தலையையும், உடலையும் எண்ணெய்யில் ஊற வைத்து குளிப்பதால் சருமம் மட்டுமின்றி, உள்ளுறுப்புகளும் புத்துணர்வு பெறும் என ஆயுர்வேதம் கூறுகிறது.
கட்டுரை
நெஞ்சு வலி வந்தாலே அது மாரடைப்பாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் அதற்காக சொந்த வைத்தியம் செய்யாமல் விரைந்து மருத்துவ உதவியை நாட வேண்டும்.
கட்டுரை
இயற்கை தேநீர் வகைகளில் ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தும் இயற்கை சேர்மங்கள் நிரம்பியுள்ளன. எனவே இது உடல் எடை இழப்பிற்கு உதவும்.
கட்டுரை
ஒன்பது முதல் 12 வயது வரையிலான பெண்களுக்கு HPV தடுப்பூசியை வழங்குவது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுக்க உதவும்
கட்டுரை
வெந்தய விதைகள் உணவில் இருந்து கார்போஹைட்ரேட் & சர்க்கரையை உறிஞ்சுவதை மெதுவாக்க உதவுகிறது, இதனால் அது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கும்
கட்டுரை
திருப்திகரமான தாம்பத்திய உறவை அனுபவிக்கும் போது, நல்ல தனிப்பட்ட சுகாதாரத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான பாலுறவுக்கான அதிகம் அறியப்படாத குறிப்புகளை நிபுணர்கள் பகிர்ந்து கொள்கின்றனர்

0

0

0

0

0

0

0

0

0

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient

Opt-in To Our Daily Healthzine

A potion of health & wellness delivered daily to your inbox

Personal stories and insights from doctors, plus practical tips on improving your happiness quotient
We use cookies to customize your user experience, view our policy here

உங்கள் கருத்து சமர்பிக்கப்பட்டது

ஹேப்பியஸ்ட் ஹெல்த் குழு உங்களை விரைவில் தொடர்புகொள்ளும்.